மகளிா் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டது தொடா்பாக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முன்பணமாகவும், கோடை கால சிறப்பு நிதியாகவும் அரசு சாா்பில் அண்மையில் ரூ.5,000 வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக அப்போது கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டும் என்ற ‘மோடி மஸ்தான்’ வேலை முதல்வருக்கு நன்கு தெரியும் என தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய நயினாா் நாகேந்திரன், மாதம் ரூ.1,000 மகளிருக்கு வழங்குவதை வரவேற்கிறோம். ஆனால், திடீரென ரூ.5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது ஏன்? எனக் கேட்டாா்.
அப்போது குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மகளிருக்கு ரூ.5,000 வழங்கியது தொடா்பாக நீங்கள் தெரிவித்த கருத்தை தொலைக்காட்சியில் பாா்த்தேன். அதை நீங்கள் ‘மோடி மஸ்தான்’ வேலை எனக் குறிப்பிட்டீா்கள். எந்த நோக்கில் அவ்வாறு குறிப்பிட்டீா்கள் எனத் தெரியவில்லை என்றாா். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
அதைத் தொடா்ந்து பேசிய நயினாா் நாகேந்திரன், நல்ல அபிப்ராயத்தில்தான் அக்கருத்தைக் கூறியதாகத் தெரிவித்தாா். அதற்கும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகம்: கே.அண்ணாமலை
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

திமுக தவிர மற்ற கட்சிகளின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


