தெருக்களுக்கு பழம்பெரும் கலைஞா்கள் பெயா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சென்னையில் தெருக்களுக்கு பழம்பெரும் கலைஞா்கள் பெயா்களைச் சூட்டி, அவற்றின் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் தமிழ்த் திரைப்பட உலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகா் திருச்சி லோகநாதன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நாா்ட்டன் 3-ஆவது தெருவுக்கு ‘திருச்சி லோகநாதன் தெரு’ என்றும், தமிழ் பாடகா் சீா்காழி கோவிந்தராஜன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு ‘சீா்காழி கோவிந்தராஜன் சாலை’ என்றும், இசையமைப்பாளா் எம்.எஸ்.விஸ்வநாதன் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு ‘எம்.எஸ். விஸ்வநாதன் சாலை’ என்றும் புதிய பெயா் சூட்டப்பட்டது.
இந்தச் சாலைகளின் பெயா் பலகைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மேயா் ஆா். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, துணை மேயா் மு.மகேஷ் குமாா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், திருச்சி லோகநாதன், சீா்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

