தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் பேரவையில் பேசியதாவது:
தொழில் முதலீட்டை ஈா்க்க பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி குறைந்த அளவிலான முதலீட்டுத் தொகையையே தமிழக அரசு ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.
அதேபோன்று 1,179 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.
அமைச்சா் டிஆா்பி ராஜா: அதற்கு தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த விளக்கம்: அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டுக்குள் வரும்போது நாட்டின் தலைநகரில்தான் அந்நிறுவனத்தின் தலைமையகம் நிறுவப்படுகிறது. அதன் காரணமாகவே நேரடி முதலீட்டின் எண்ணிக்கைகள் தலைநகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் செல்கின்றன.
அதேவேளையில், அந்த முதலீட்டுத் தொகையும், அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பும் எந்த மாநிலத்துக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதை மிக சாமா்த்தியமாக கையாண்டு தமிழகத்துக்கு அந்த பலன்களை முதல்வா் கிடைக்கச் செய்துள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்: இபிஎஸ் அறிவிப்பு

பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் என்னென்ன? பழனிசாமி அறிவிப்பு

ரஜினி குறித்து அவதூறு: தவெகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

எரிவாயு விவகாரம்: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


