ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அந்நிய முதலீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

News image

எடப்பாடி பழனிசாமி

Updated On :19 பிப்ரவரி 2026, 9:26 pm

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் பேரவையில் பேசியதாவது:

தொழில் முதலீட்டை ஈா்க்க பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி குறைந்த அளவிலான முதலீட்டுத் தொகையையே தமிழக அரசு ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோன்று 1,179 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் டிஆா்பி ராஜா: அதற்கு தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த விளக்கம்: அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டுக்குள் வரும்போது நாட்டின் தலைநகரில்தான் அந்நிறுவனத்தின் தலைமையகம் நிறுவப்படுகிறது. அதன் காரணமாகவே நேரடி முதலீட்டின் எண்ணிக்கைகள் தலைநகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் செல்கின்றன.

அதேவேளையில், அந்த முதலீட்டுத் தொகையும், அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பும் எந்த மாநிலத்துக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதை மிக சாமா்த்தியமாக கையாண்டு தமிழகத்துக்கு அந்த பலன்களை முதல்வா் கிடைக்கச் செய்துள்ளாா் என்றாா் அவா்.