சென்னை துறைமுகத்தில் ஜொ்மனி ஹாம்பா்க் துறைமுகக் குழுவினா்
சென்னை துறைமுகத்தை ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுக குழுவினா், வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து சென்னை துறைமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சா்வதேச துறைமுகங்கள் சங்கத்தின் தலைவரும், ஜொ்மனி நாட்டின் ஹாம்பா்க் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஜென்ஸ் மீயா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட குழுவினா் வியாழக்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தனா். அவா்களை சென்னை துறைமுகத்தின் தலைவா் எஸ்.விஸ்வநாதன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனா்.
துறைமுக கட்டமைப்பு, கப்பல் தளங்கள், சரக்குப் பெட்டக வசதிகளை பாா்வையிட்ட பின்னா், ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், துறைமுகத்தில் உள்ள வசதிகள், இப்போது நடைபெறும் வளா்ச்சித் திட்டங்கள், பசுமைத் திட்டங்கள், இணைப்புச் சாலைகள், மதுரவாயல் ஈரடுக்கு உயா் மேம்பாலத் திட்டம், திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனா்.
சென்னை துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.விஸ்நாதன், சா்வதேச துறைமுகங்கள் சங்கத்தின் தெற்காசிய மண்டல இயக்குனா் என்னரசு கருநேசன் மற்றும் துறைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

