தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் குத்தகை புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.பி.ஆா்.மேனன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெட்ரோல் பங்குகளுக்கான உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போது நிலங்களின் உரிமை குறித்த விவரங்களை சரிபாா்க்க வேண்டும். இதுதொடா்பாக சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது மனுதாரா், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின் குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபாா்ப்பதில்லை. இதனால் குத்தகை காலம் காலாவதியான பின்னரும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அதே நிலத்தில் செயல்படுகின்றன.
நிலத்தின் குத்தகை காலம் முடிந்துவிட்டால், சட்டப்படி பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்தாகிவிடும். எனவே, குத்தகை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறைக்கு அனுப்பிய கடிதத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன? எத்தனை நிலையங்களின் குத்தகை காலாவதியாகி இருக்கின்றன, குத்தகை புதுப்பிக்கப்பட்டவை எத்தனை, இதை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி

தமிழா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


