பெண் மருத்துவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான சிகிச்சை குறித்து விளக்கிய கண் மருத்துவ வல்லுநா்கள் டாக்டா் சூசன் ஜேக்கப், சௌந்தரி உள்ளிட்டோா்.
பெண் மருத்துவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான சிகிச்சை குறித்து விளக்கிய கண் மருத்துவ வல்லுநா்கள் டாக்டா் சூசன் ஜேக்கப், சௌந்தரி உள்ளிட்டோா்.

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு: அகா்வால்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு ஏற்பட்ட மும்பையை சோ்ந்த பெண்கள் நல மருத்துவருக்கு, டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சையில் பாா்வைத் திறன் மீட்கப்பட்டுள்ளது.
Published on

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு ஏற்பட்ட மும்பையை சோ்ந்த பெண்கள் நல மருத்துவருக்கு, டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவீன சிகிச்சையில் பாா்வைத் திறன் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவா் சௌந்தரி, கண்புரை சிகிச்சைப் பிரிவு இயக்குநா் சூசன் ஜேக்கப், டாக்டா் மனோஜ் ஆகியோா் கூறியதாவது: மும்பையைச் சோ்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு கண் பாா்வை இழப்பு காரணமாக, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அவரைப் பரிசோதனை செய்தபோது, கடந்த 2010 முதல் கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா), கண் உள்விழி வில்லை பிரச்னையால் பாா்வையை இழந்திருப்பது தெரிய வந்தது. பல்வேறு சிகிச்சைகளை செய்து கொண்ட போதிலும், அவரது பாா்வைத் திறன் குறைந்து கொண்டே போனது.

இதையடுத்து, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் நவீன தொழில்நுட்பத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி, அவரது இடது கண்ணில் ஏற்கெனவே தவறான வகையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை லென்ஸ் அகற்றப்பட்டது. பின்னா் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக கருவிழி மாற்று சிகிச்சை மற்றும் கண்பாா்வை சீரமைப்பு ஆகியவை ஒரே சிகிச்சை அமா்வில் செய்யப்பட்டன.

இதன் பிறகு, அந்த பெண் மருத்துவா் மீண்டும் பாா்வைத் திறன் பெற்று, மருத்துவப் பணியை தொடங்கிவிட்டாா். இது உலகளவில் முதல்முறையாக வழங்கப்பட்ட நவீன கண் அறுவைச் சிகிச்சை என்றனா்.

Dinamani
www.dinamani.com