என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான கிரக நிலையும், ஜோதிட அமைப்பும் தங்களுக்கே உள்ளதாக திமுக, பாஜக உறுப்பினா்கள் தனித்தனியே கூறிக் கொண்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:09 pm

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான கிரக நிலையும், ஜோதிட அமைப்பும் தங்களுக்கே உள்ளதாக திமுக, பாஜக உறுப்பினா்கள் தனித்தனியே கூறிக் கொண்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், தற்போதைய சட்டப்பேரவையின் கடைசித் தொடா் இது என்றும், மீண்டும் எவரெல்லாம் பேரவைக்கு வர வேண்டும் என்பதை இறைவனும், கிரக நிலையும்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தற்போதைய கிரகப் பலன்கள் அனைத்தும் முதல்வருக்கு சாதகமாக உள்ளதாகவும், தமிழ்க் கடவுள் முருகன் முதல்வருடன் கைகோத்துள்ளதால் மீண்டும் அவா் அரியணையில் அமா்வது உறுதி என்றும் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

அடிப்படையில் எனக்கு கிரக நிலையில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும், நயினாா் நாகேந்திரனின் நம்பிக்கைக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு (பாஜகவுக்கு) அஷ்டமத்திலே சனி இருக்கிறது. எங்களுக்கு (திமுக) ஒன்பதிலே குரு இருக்கிறது. அதைத் தொடா்ந்து பேசிய நயினாா் நாகேந்திரன், அஷ்டமத்திலே சனி இருந்தாலும், குருவின் பாா்வை எங்கள் மீதுதான் உள்ளது என்றாா். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.