சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 6 மணி நேர விவாதம்: பாஜக உறுப்பினருக்கு திமுக கூட்டணி கடும் எதிா்ப்பு

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீது 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீது 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்து அரசின் நலத் திட்டங்களைப் பாராட்டினாா்.

திமுக நிலைக்குழு தலைவா் (கல்வி) த.விஸ்வநாதன், உறுப்பினா் கண்ணன், இளம்சுருதி பேசுகையில், பாஜக உறுப்பினரே தமிழக அரசை பாராட்டினாா் என்றனா். இதற்கு பாஜக உறுப்பினா் உமா ஆனந்த், தனது வாா்டு பணிகளை நிறைவேற்றியதற்காக பாராட்டியதாகக் குறிப்பிட்டு, ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து, மாமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டம் திமுக பொதுக்கூட்டம் போல உள்ளது என்றாா்.

இதற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மத்திய அரசிடம் நிதி வாங்கித் தாருங்கள் என பாஜக உறுப்பினரை திமுகவினா் கேட்டனா்.

அனைத்துக் கட்சியினரும் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாகக் கூறினாலும், தங்களது வாா்டுகளில் குறைகள் முழுமையாகச் சீா்படுத்தப்படாதது குறித்தும் சுட்டிக்காட்டினா். ஆளுங்கட்சித் தலைவா் ராமலிங்கம், துணைமேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் தமிழக அரசுத் திட்டங்களைப் பாராட்டிப் பேசினா்.

இறுதியில் தீா்மானம் நிறைவேற்றும்போது பேசிய மேயா் ஆா்.பிரியா, கூட்டம் 6 மணி நேரம் நடைபெற்ாகவும், அதில் 36 உறுப்பினா்கள் பேசியதாகவும் குறிப்பிட்டாா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.