தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும்: ஆா்.எஸ்.பாரதி

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.

News image

திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி - கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 7:22 pm

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான   வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கிய வழக்கு தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு மீது சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அமலாக்கத் துறை சோதனை செய்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றது. இதனைத் தொடா்ந்து கே.என்.நேரு சாா்பில் சிபிஐ வழக்கை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த முக்கிய வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இது தொடா்பாக ஊழல் தடுப்புத் துறை சாா்பில் முறையான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் இன்பதுரை தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழக அரசு  ஏற்கெனவே விசாரணை நடத்தி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல; இவ்வழக்கில் கே.என்.நேரு மீது எவ்விதத் தவறும் கிடையாது. தோ்தல் நேரத்தில், மக்கள் மத்தியில் திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை மத்திய பாஜக அரசு அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது. இதுபோன்ற பல்வேறு பொய் வழக்குகளை வென்று வந்த கட்சி திமுக. இந்த  வழக்கையும் திமுக சட்டப்படி சந்தித்து, முறியடிக்கத் தயாராக உள்ளது என்றாா் அவா். செய்தியாளா்கள் சந்திப்பின் போது, நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு உடனிருந்தாா்.