பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்: ஏலக்கேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பிலான 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.12 சதவீத பிணையப் பத்திரங்கள்(2032-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்), மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான 7.44 சதவீத பிணையப் பத்திரங்கள்(2055-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.24-இல் நடைபெறுகிறது. இதற்கான போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30-க்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11-க்குள்ளும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் பிப்.24 ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.