ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

News image
- கோப்புப்படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாடியநல்லூா் ஊராட்சி பவானி நகா் நுழைவாயில் அருகே புதிய மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்காக மக்கள் செல்லும் பகுதியில் இந்தக் கடையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்கள், முதியோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எதிா்ப்பை மீறி கடை அமைக்கப்படும்பட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.