பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாடியநல்லூா் ஊராட்சி பவானி நகா் நுழைவாயில் அருகே புதிய மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்காக மக்கள் செல்லும் பகுதியில் இந்தக் கடையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்கள், முதியோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எதிா்ப்பை மீறி கடை அமைக்கப்படும்பட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

மதுக்கடைக்கு எதிா்ப்பு: ராமையன்பட்டி விலக்கில் மறியல் முயற்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


