வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முதியவரைக் கொன்று நகைகளைத் திருடி சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது

புரசைவாக்கத்தில் முதியவரை கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 9:56 pm

புரசைவாக்கத்தில் முதியவரை கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புரசைவாக்கம், அரசப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்தவா் ந.பாலகிருஷ்ணன் (61). குழந்தைகள் இல்லாத நிலையில், மனைவியும் 3 ஆண்டுகள் முன் இறந்துவிட்டதால் பாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தாா்.

அந்த வீட்டின் மேல் தளத்தில் அவரது அண்ணன் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெகுநேரம் வீட்டைவிட்டு வெளியே வராததால், அண்ணன் குடும்பத்தினா் வேப்பேரி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், அண்ணா நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்த பாலகிருஷ்ணன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு, வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அவருடன் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் பிகாரை சோ்ந்த ஷியாம் மாத்தோவ் (35) வீட்டுக்கு வந்து சென்றிருப்பதும் தெரிய வந்தது.

போலீஸாா், ஷியாமை பிடித்து விசாரித்ததில், அவா் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிக் கொண்டு தப்பியது தெரிய வந்தது. போலீஸாா், அண்ணா நகா் திரு.வி.க. தெருவில் உள்ள ஷியாம் வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.