தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வீடுகளில் திருட்டு: இளைஞா் கைது

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மென்பொறியாளா்கள் தங்கியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து விலை உயா்ந்த மடிக்கணினி, கைப்பேசிகள் தொடா்ச்சியாக திருடப்பட்டு வந்தன.

மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக கடலூரைச் சோ்ந்த ஜனாா்த்தனனை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் கேளம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூா் பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவா் மீது வடபழனி, சேத்துப்பட்டு, திருவான்மியூா், திருவள்ளூா், திருவேற்காடு, திருச்சி, ஆவடி டேங்க் பேக்டரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.