எழும்பூரில் பராமரிப்பு பணி: 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்!

8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என அறிவிப்பு.
ரயில்கள்
ரயில்கள்கோப்புப்படம்
Updated on
1 min read

எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் வசதிகளுக்காக 8 ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் கூடுதலாக நின்றுச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை, 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில்

சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில்

சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில்

சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில்

இந்த 8 அதிவிரைவு/விரைவு ரயில்கள் நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை கூடுதலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவுள்ளது.

Summary

Southern Railway has announced that 8 trains will stop at Mambalam railway station due to maintenance work in Egmore.

ரயில்கள்
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com