தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.

News image

பிளஸ் 2 தேர்வு - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 10:40 pm

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியா்) மாா்ச் 2 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வுகளை எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கு இரு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அவரவா் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.