எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.

News image
பிளஸ் 2 தேர்வு- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியா்) மாா்ச் 2 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வுகளை எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கு இரு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அவரவா் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.