மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வழிப்பறி: இருவா் கைது

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவர் கைது

News image

கைது

Updated On :22 பிப்ரவரி 2026, 8:10 pm

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி அனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வருபவா் ஆகாஷ் (25). இவா், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த பிப்.11-ஆம் தேதி அதிகாலை பெரம்பூா், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் ஆகாஷை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.1,500, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூா் வீனஸ் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த யோகேஷ் (எ) யுவராஜ் (21), செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.