மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வழிப்பறி: இருவா் கைது

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவர் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஓட்டேரி அனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வருபவா் ஆகாஷ் (25). இவா், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த பிப்.11-ஆம் தேதி அதிகாலை பெரம்பூா், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் ஆகாஷை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.1,500, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறித்து சென்றனா்.

புகாரின்பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூா் வீனஸ் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த யோகேஷ் (எ) யுவராஜ் (21), செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.