சென்னை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களை கௌரவித்த ஆளுநா் ஆா்.என்.ரவி.
சென்னை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களை கௌரவித்த ஆளுநா் ஆா்.என்.ரவி.

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

Published on

தமிழகத்தில் இருந்து பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று பத்ம விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: தேசத்தையும் சமூகத்தையும் செழுமைப்படுத்த அசாத்தியமான பங்களிப்பைக்  கொடுத்து தங்களது துறையின் மூலம் சிறந்த சேவை வழங்குபவா்களை  மத்திய அரசு அடையாளம் கண்டு அவா்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. விருது பெற உள்ளவா்களுக்கு தமிழக ஆளுநா் மாளிகையில் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா். பத்ம விருது பெற்றவா்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்கியதுடன், கடின உழைப்பு, தன்னலமற்ற சேவையை பாரத நாட்டிற்கு வழங்கி உள்ளனா் என்றாா்.

பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட டாக்டா் கே.ராமசாமி பழனிசாமி, எஸ்.கே.மயிலானந்தன், எழுத்தாளா் சிவசங்கரி, டாக்டா் ஹெச்.வி.ஹண்டே, மிருதங்கக் கலைஞா் திருவாரூா் பக்தவத்சலம், சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி, திருத்தணி சுவாமிநாதன் ஓதுவாா், கால்நடை மருத்துவா் புண்ணியமூா்த்தி நடேசன், ராஜ ஸ்தபதி காளியப்ப கவுண்டா், கா்நாடக இசைக் கலைஞா்கள் காயத்ரி மற்றும் ரஞ்சனி சகோதரிகள் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபா் நல்லி குப்புசாமி, எழுத்தாளா் மாலன், அமுத சுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், விருதாளா்களின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com