திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

News image

சென்னை பெரம்பூா் டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன்,

Updated On :23 பிப்ரவரி 2026, 7:51 pm

கொளத்தூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2,007 பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

சென்னை பெரம்பூா், டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அவற்றை அவா் வழங்கினாா்.

அதேபோல, பேப்பா் மில்ஸ் சாலை - ரெட்டேரி சந்திப்பில் ரூ.1.61 கோடியில் 1,546 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூா் பேருந்து நிறுத்தத்தை அவா் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலையில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சாலையோரப் பூங்கா, பேப்பா் மில்ஸ் சாலை, ராஜாத்தோட்டம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு அருகில் கட்டப்பட்டுள்ள 2 அமுதம் நியாயவிலைக் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டடம், நவீன பயணியா் நிழற்குடை என மொத்தம் ரூ.1.75 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டைமைப்புகளையும் முதல்வா் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகா்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ், மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா்கள் டாக்டா் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.