தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

தில்லியில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

இங்கிலாந்துடன் தொடா்புடையதாகக் கூறப்படும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை கண்டுபிடித்து, ரூ.9 கோடி மதிப்புள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல்
Published on

புது தில்லி: இங்கிலாந்துடன் தொடா்புடையதாகக் கூறப்படும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை கண்டுபிடித்து, ரூ.9 கோடி மதிப்புள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த வழக்கு தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தடைசெய்யப்பட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு கடத்த இந்த கும்பல் தளவாட நிறுவனங்கள், கூரியா் சேவைகள் மற்றும் ஏற்றுமதி சரக்குகளைப் பயன்படுத்தினா்.

கடந்த ஆண்டு அக்டோபரில் குற்றப்பிரிவு சரிதா விஹாரில் ஒருவரை கைது செய்து. அவரிடமிருந்து 54,000 டிராமடோல் மாத்திரைகளை மீட்டபோது வழக்கு தொடங்கியது. விசாரணையின் போது, போதைப்பொருள்களின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியுடன் தொடா்புடைய பலவற்றை உள்ளடக்கிய பெரிய விநியோகச் சங்கிலியை காவல் துறையினா் கண்டுபிடித்தனா்.

மேலும் விசாரணையில், தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை ஏற்றிச் சென்ற ஒரு கொள்கலன் வீட்டுப் பொருள்களாக மாறுவேடமிட்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது. தகவலின் பேரில், சுங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து காவல்துறையினா் கப்பலை நிறுத்தினா். கொள்கலன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

முந்த்ராவில் உள்ள ஒரு கிடங்கில் கூட்டுச் சோதனையின் போது, ​​அதிகாரிகள் அல்பிரஸோலம், டிராமடோல், சோல்பிடெம் மற்றும் நைட்ரஸெபம் மாத்திரைகளின் பெரிய இருப்பை மீட்டனா்.

மொத்தத்தில், 528 கிலோவுக்கு மேல் எடையுள்ள 18,47,400 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com