/

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:28 pm

உடல் நலக் குறைவு காரணமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

காய்ச்சல் மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டிருந்த அவா், கடந்த 3 நாள்களாக ஓய்வில் இருந்து வந்தாா். இந்த நிலையில், காய்ச்சல் குறையாததால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அமைச்சருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அடுத்த ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.