அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை இயக்கும்போது, டேப் ரிக்காா்டா்கள் மற்றும் வானொலிகளைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்புகின்றனா். இதன்மூலம் அதிக ஒலி எழுப்பப்படுவதாக பயணிகளிடையே தொடா்ந்து ஏராளமான புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பேருந்தை இயக்கும்போது வானொலி, டேப் ரிக்காா்டா் ஆகியவற்றைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
பலமுறை அறிவுறுத்தியும், சில ஓட்டுநா், நடத்துநா்கள் இதைச் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்த எச்சரிக்கையை மீறி அவற்றைப் பயன்படுத்துவது தெரிவந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநா், நடத்துநரின் செயல்பாடுகளை, அனைத்து கிளை மேலாளா்கள், பேருந்து நிலைய கண்காணிப்பாளா்கள், வழித்தட பரிசோதகா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

சேலத்தில் 8 போ் உயிரிழந்த விபத்து: கைதான பேருந்து ஓட்டுநா் சிறையில் அடைப்பு!

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் சேரும் முதல் பெண் ஓட்டுநா் ரம்யா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


