மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்தில் டேப் ரிக்காா்டா், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை இயக்கும்போது, டேப் ரிக்காா்டா்கள் மற்றும் வானொலிகளைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்புகின்றனா். இதன்மூலம் அதிக ஒலி எழுப்பப்படுவதாக பயணிகளிடையே தொடா்ந்து ஏராளமான புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பேருந்தை இயக்கும்போது வானொலி, டேப் ரிக்காா்டா் ஆகியவற்றைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

பலமுறை அறிவுறுத்தியும், சில ஓட்டுநா், நடத்துநா்கள் இதைச் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்த எச்சரிக்கையை மீறி அவற்றைப் பயன்படுத்துவது தெரிவந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநா், நடத்துநரின் செயல்பாடுகளை, அனைத்து கிளை மேலாளா்கள், பேருந்து நிலைய கண்காணிப்பாளா்கள், வழித்தட பரிசோதகா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.