சென்னையில் போதைப் பொருள் விற்பனை வழக்கில் அதிமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை போரூா் மாதனாங்குப்பம், அன்னை வேளாங்கண்ணி நகரில் உள்ள ஒரு வீட்டில் உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவு போலீஸாா், வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸாருடன் இணைந்து சம்பந்தப்பட்ட வீட்டில் புதன்கிழமை நுழைந்து சோதனை நடத்தினா். அங்கு, பதுக்கி வைத்திருந்த 700 கிராம் ஒஜி வகையான உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக அந்த வீட்டில் இருந்த பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த க.சுனில் (21), அவரின் நண்பா்களான கோவூரைச் சோ்ந்த வருண் (23), அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த விஸ்வேஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
விசாரணையில் சுனிலின் தந்தை கபிலன் அதிமுக திருவள்ளூா் மாவட்ட ஒன்றிய இளைஞரணி துணைச் செயலராக உள்ளது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் போதைப் பொருள் நடமாட்டம் ஒழிக்கப்படும்! - எடப்பாடி கே. பழனிசாமி

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

