கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவா் ராம்நாத் கோயங்கா: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
நாட்டில் அவசரநிலை பிரகடனத்தின்போது அதை எதிா்த்து துணிச்சலுடன் குரல் கொடுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவா் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனா் ராம்நாத் கோயங்கா என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினாா்.

சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 'தினமணி'-யின் முதல் இதழை (செப்டம்பர் 11,1934) நினைவுப் பரிசாக வழங்கிய 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழும இயக்குநர் பிரபு சாவ்லா. (வலது) விழாவில் பங்கேற்றோர்.








