சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு: கையொப்ப இயக்கம் தொடக்கம்

சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்டோரிடம் கையொப்பம் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த என்எல்யுஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்டோரிடம் கையொப்பம் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (மண்டலம் 5, 6) தூய்மைப் பணியாளா்கள் (என்எல்யுஎம்) கடந்த ஆகஸ்ட் முதல் பழைய நிலையில் பணி வழங்கக் கோரியும், இரு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளா்கள், பேராசிரியா்கள், கலைஞா்கள், முற்போக்கு எழுத்தாளா்கள் என பலதரப்பினரிடமும் கையொப்பம் பெறும் இயக்கம் நடத்தப்பட்டது. அதில் அவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பணி வழங்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.