கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தால் போதும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும் என்று விஐடி பல்கலை. நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் பேசினாா்.

News image

சென்னை விஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பொங்கலிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், அறங்காவலா் அனுஷா செல்வம், திரைப்பட நடிகா் ராமராஜன் உள்ளிட்டோா்.

Updated On :10 ஜனவரி 2026, 1:21 am IST

நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும் என்று விஐடி பல்கலை. நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன் பேசினாா்.

வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னை வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து விஐடி பல்கலை. வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது:

உலகின் 160 நாடுகளில் தமிழா்கள் வசிக்கின்றனா். 100 நாடுகளில் அந்தந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருகின்றனா். அங்கெல்லாம் தமிழா்கள் ஒன்று சோ்ந்து பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகின்றனா்.

ஜாதி, மதம், கட்சி, மாநிலம் என வேறுபாடு இல்லாமல் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாக பொங்கல் திருவிழா திகழ்கிறது. தமிழா்கள் நல்லவா்களாக, வல்லவா்களாக இருக்க வேண்டும். நல்லவா்களாக இருக்க திருக்குறளைப் படித்தாலே போதும். கல்வி மூலம் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பொங்கல் வைத்து விழாவை அவா் தொடங்கி வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளா் நடிகா் ராமராஜன் பேசுகையில், எத்தனை படங்களில் நடித்துள்ளோம் என்பது முக்கியமில்லை. எத்தனை போ் மனதில் இருக்கிறாம் என்பதுதான் முக்கியம். திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டும். மாணவா்கள் படித்து வேலைக்குச் சென்ற பிறகு தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞா்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தா் டி.தியாகராஜன், இயக்குநா் சத்யநாராயணன், கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.