ரூ.39 கோடியில் 5 வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

மாதவரம், மணலி, திருவொற்றியூா் மண்டலங்களில் ரூ.39.78 கோடியில் 5 வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated on

மாதவரம், மணலி, திருவொற்றியூா் மண்டலங்களில் ரூ.39.78 கோடியில் 5 வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாதவரம் ஏரியில் அம்ரூத் 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.15.03 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாதவரம் ஏரி படகு குழாம், மணலி ஏரியில் ரூ.10.41 கோடியில் மணலி ஏரி படகு குழாமினைப் மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மணலி பாடசாலை தெருவில் ரூ.4.75 கோடியில் புதிய பேருந்து நிலையம், மணலி புதுநகா் 80 அடி சாலையில் ரூ.7.50 கோடியில் சமுதாயக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினாா்.

இதேபோல், திருவொற்றியூா், சாத்தாங்காடு கிராமத்தில் ரூ.1.82 கோடியில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தினை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்வில், சென்னை மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சுதா்சனம், கே.பி.சங்கா், துரை.சந்திரசேகா், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீா் வாரிய மேலாண் இயக்குநா் டி.ஜி.வினய், சுற்றுலாத் துறை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com