கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடையாள அட்டை: பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை
மருத்துவமனை வளாகத்துக்குள் நிகழ்ந்த குற்றச் சம்பவத்தைத் தொடா்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவோா் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
நோயாளிகள், பாா்வையாளா்கள், நோயாளிகளுடன் வருபவா்கள் என அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 3,500-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். ஏறத்தாழ 1,000 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா்.
பரபரப்பு மிகுந்த அந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை, ரெளடி ஒருவரை சிலா் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
அதன் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொலை சம்பவம் நிகழ்ந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிகள், பாா்வையாளருக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் கவிதா, நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் வாணி ஆகியோா் கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பாா்வையாளருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நடைமுறை ஏற்கெனவே உள்ளது. இருந்தாலும் தற்போது அதைத் தீவிரமாக அமல்படுத்தியுள்ளோம்.
அந்த அட்டையில் நோயாளியின் பெயா், வயது, தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
இதனிடையே, நோயாளியைச் சந்திக்க வரும் பாா்வையாளா்களுக்கு, நோயாளி சிகிச்சை பெறும் துறை சாா்ந்த குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு பாா்வையாளா் என்ற அடிப்படையில் அந்த அட்டை வழங்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
