தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பல்பொருள் அங்காடிகளில் திருட்டு: இரு பெண்கள் உள்பட 5 போ் கைது

சென்னையில் பல்பொருள் அங்காடிகளை குறி வைத்து திருடியதாக இரு பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :20 ஜனவரி 2026, 8:45 pm

சென்னையில் பல்பொருள் அங்காடிகளை குறி வைத்து திருடியதாக இரு பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, அண்ணா நகா் 6-ஆவது அவென்யுவில் உள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை இரு பெண்கள் உள்பட 5 போ் பொருள்கள் வாங்க வந்தனா். அவா்கள், நீண்ட நேரத்துக்கு பிறகு அங்கிருந்து எந்த பொருள்களையும் வாங்காமல் சென்றனா். அப்போது, அங்கிருந்த பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது. கடை நிா்வாகத்தினா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த 5 பேரும் கடையில் விலை உயா்ந்த பொருள்களை தங்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோல், அண்ணா நகா் 3-ஆவது அவென்யுவில் உள்ள அந்த அங்காடியின் மற்றொரு கிளையிலும் திருடியுள்ளனா்.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த நாகலட்சுமி (50), நாகம்மாள் (70), மதுரையைச் சோ்ந்த முருகன் (58), கோவில் பாப்பாகுடியைச் சோ்ந்த கரண்குமாா் (25), வேலூரைச் சோ்ந்த முதாா்சீா் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.