பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

Published on

பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பிராட்வே தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா்கள் ஆஷாத், வெ.பரிமளம், முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கபீா், உதவிக் கல்வி அலுவலா் முருகன், பள்ளித் தாளாளா் ஜோ ஆண்ட்ரு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com