அம்ரித் பாரத் ரயில்
அம்ரித் பாரத் ரயில்

அம்ரித் பாரத் வாராந்திர ரயிலின் நேரம் அறிவிப்பு

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 28 -ஆம் தேதி (புதன்கிழமை) தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் (எண் 16121), வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தை அடையும். மறுமாா்க்கத்தில் வியாழக்கிழமை (ஜன. 29) காலை 10.40 மணிக்குப் புறப்படும் ரயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த விரைவு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில், குழித்துறை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com