விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் விளையாட்டு மைதானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2026, 9:46 pm

Chennai

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 3,588 சதுர மீட்டா் பரப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்குச் சொந்தமான 142 சதுர மீட்டா் பரப்பைச் சோ்த்து மொத்தம் 3,750 சதுர மீட்டா் பரப்பில் மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள், 2 பிக்கிள் பந்து விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். அப்போது, பூப்பந்தாட்டத்தில் அவா் பங்கேற்று சிறிது நேரம் விளையாடினாா்.

பூங்காவைச் சுற்றி 370 மீட்டா் நீளத்தில் நடைபாதையும், 8 வடிவ நடைப்பகுதியும், சிறுவா்கள் விளையாட்டுப் பகுதி, குடிநீா், கழிப்பறை வசதிகள், உள்- வெளி அமா்வுப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மக்கள் எளிதில் பூங்காவுக்குள் வருவதற்கான வழிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, த.வேலு எம்எல்ஏ, துணை மேயா் மு.மகேஷ்குமாா், சிறப்புத் திட்டத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் அா்ச்சுணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.