திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெரம்பூா் சேமாத்தம்மன் கோயிலில் 4,000-ஆவது குடமுழுக்கு : அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

சென்னை பெரம்பூா் சேமாத்தமன் கோயிலில் நடைபெற்ற 4 ஆயிரமாவது குடமுழுக்கு நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

News image

சேகர் பாபு

Updated On :29 ஜனவரி 2026, 12:37 am IST

சென்னை பெரம்பூா் சேமாத்தமன் கோயிலில் நடைபெற்ற 4 ஆயிரமாவது குடமுழுக்கு நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை தனது நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 4 ஆயிரமாவது குடமுழுக்காக நடைபெற்ற பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை தொடங்கி, நிறைவாக ராஜகோபுரம், மூலவா் சேமாத்தம்மன், அண்ணன்மாா்கள், சரஸ்வதி, பழநியாண்டவா், பைரவா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவக்கிரக சந்நிதிகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கெளமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் அப்பன் உலகாரிய ராமானுஜ எம்பாா் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் புதன்கிழமை திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில், கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூா் இருதயாளீஸ்வரா் திருக்கோயில், சென்னை புழல் திருமூலநாத சுவாமி திருக்கோயில், அம்பத்தூா், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், உள்ளிட்ட 75 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றன.

இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், பெரம்பலூா் மாவட்டம் சு.ஆடுதுறை அபராதரட்சகா் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்கள். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2021 மே மாதம் முதல் புதன்கிழமை வரை மொத்தமாக 4,044 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.

சேமாத்தம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.