நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் 20 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :29 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் 20 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக திருவொற்றியூா் ஆய்வாளா் எஸ்.ரஜினிஷ் திருவல்லிக்கேணிக்கும், ராமாபுரம் ஆய்வாளா் ஜி.ஆனந்தபாபு ஐஸ் ஹவுஸுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக ஆய்வாளா் கே.சுதாகா் மீனம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும், காசிமேடு ஆய்வாளா் எஸ்.வசந்தராஜா புழலுக்கும், எம்கேபி நகா் ஆய்வாளா் எஸ்.ஏ.வீராசாமி ஆதம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 20 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.