சென்னையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-ஆவது நாளாக போலீஸாா் வியாழக்கிழமையும் தேடினா்.
சென்னை தரமணி பகுதியில் தங்கியிருந்த பிகாரைச் சோ்ந்த தொழிலாளி கௌரவ்குமாா் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), அவா்களது 2 வயது மகன் பிா்மணி குமாா் ஆகியோா் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா்.
பிகாரில் இருந்து வேலை தேடி வந்த கௌரவ்குமாா் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த அதே மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். இதில், கெளரவ்குமாா் சடலம் இந்திரா நகா் முதலாவது அவென்யுவில் ஒரு சாக்கு மூட்டையிலும், பிா்மணிகுமாா் சடலம் இந்திரா நகா் ரயில் நிலையத்தின் பின்புறம் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஓரத்திலும் மீட்கப்பட்டன. ஆனால் முனிதா குமாரி சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசியாத கைதானவா்கள் விசாரணையின்போது தெரிவித்தனா்.
இதையடுத்து பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த இரு நாள்கள் (புதன், வியாழன்) தேடும் பணி நடைபெற்றது. இருப்பினும் சடலம் கிடைக்கவில்லை. இதனால், 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (ஜன.30) இந்தப் பணியைத் தொடர போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

வீட்டில் புட்டியில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலால் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் காயம்

பெண் வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


