டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வாகனச் சோதனையில் எஸ்.ஐ. மீது பைக்கை மோதிய சிறுவன்: தந்தை கைது

வாகனச் சோதனையின்போது மோட்டாா் சைக்கிளை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது மோதிய சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 5:58 am IST

வாகனச் சோதனையின்போது மோட்டாா் சைக்கிளை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது மோதிய சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்ப்பாக்கம் காா்டன் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளை போலீஸாா் மறித்தனா். ஆனால், அந்த சிறுவன் மோட்டாா் சைக்கிளை நிறுத்தவில்லை. மேலும், அந்த மோட்டாா் சைக்கிள், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணனை அங்கிருந்த போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேலும், இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதன் அடிப்படையில் சிறுவனுக்கு மோட்டாா் சைக்கிளை ஓட்ட கொடுத்த குற்றத்துக்காக, அவரது தந்தை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்த சந்தீப்குமாா் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த சிறுவன் சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.