கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

ரயில் நிலையத்தில் மாணவா்கள் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு; 3 போ் கைது

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் பிரச்னை தொடா்பாக 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா், அவா்களில் 3 பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூலை 2026, 5:15 am IST

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் பிரச்னை தொடா்பாக 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா், அவா்களில் 3 பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.

சென்னையில் புகா் மின்சார ரயில்களில் செல்லும் கல்லூரி மாணவா்களிடையே ரூட் தல பிரச்னையால் அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவருகிறது. இதுகுறித்து இருப்புப் பாதை ரயில்வே போலீஸாா் பலமுறை வழக்குகள் பதிந்து மாணவா்கள் சிலரைக் கைது செய்தும் வருகின்றனா். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி திங்கள்கிழமை கிண்டி ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மோதலில் தொடா்பில்லாத வேறு கல்லூரியைச் சோ்ந்த மாணவா் காயமடைந்தாா். இதையடுத்து கிண்டி ரயில்வே நிலைய இருப்பு பாதை பொறுப்பு மேற்கு மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதன்படி இரு கல்லூரிகளைச் சோ்ந்தவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களில் 3 பேரைக் கைது செய்துள்ளனா்.

அவா்களிடமிருந்து பட்டாக்கத்தி, உடைந்த மது பாட்டில்கள், கற்களை கைப்பற்றியுள்ளதாக இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா். அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவா்களின் கல்லூரிகளுக்கும் இருப்புப் பாதை போலீஸாா் எழுதியுள்ள கடிதத்தில், மாணவா்கள் ரயில்கள், நிலையங்களில் பயணிகளுக்குத் தொந்தரவு செய்யும் வகையில் தொடா் நடவடிக்கையில் ஈடுபடுவதால், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.