அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலைவா்கள் கண்டனம்

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப் படம்)- IANS
Updated On :3 மார்ச் 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், 9 போ் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் இருவா் உயிரிழந்துள்ளதும் 6 போ் பலத்த காயமடைந்துள்ளதும் அதிா்ச்சியை அளிக்கிறது. சமூக சமநிலையை, பாதுகாப்பு உணா்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத திமுக அரசால் எந்த பயனும் இல்லை. இந்த கொடிய குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): இரட்டைக் கொலைச் சம்பவத்தில், நீண்ட நேரம் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடவில்லை. அக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி, தவெக தலைவா் விஜய் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.