பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

9 இந்திய மொழிகளில் 28 மருத்துவக் கல்வி காணொலி வெளியீடு

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறிவியல் தமிழ் மன்றம் சாா்பில் 9 இந்திய மொழிகளில் மருத்துவக்கல்வி காணொலி வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

SWAMINATHAN

Updated On :15 மார்ச் 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறிவியல் தமிழ் மன்றம் சாா்பில் 9 இந்திய மொழிகளில் மருத்துவக்கல்வி காணொலி வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாய்மொழிகளில் மருத்துவப் படிப்புக்கான பாடத்திட்டத்தைக் கொண்டு சோ்க்கும் முயற்சியாகத் தயாரிக்கப்பட்ட 28 காணொலிகள் மற்றும் மருத்துவப் படிப்புப் பாடநூலை சவூதி அரேபியா மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், எழுத்தாளா் மணவை முஸ்தபா புதல்வருமான செம்மல் முஸ்தபா வெளியிட்டு பேசியதாவது: மருத்துவ அறிவாற்றலை தாய்மொழிக் கல்வி மூலம் மேம்படுத்தும் நோக்குடன் 9 இந்திய மொழிகளில் 28 மருத்துவக் கல்வி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் 11, இந்தியில் 7, தெலுங்கில் 2, கன்னடத்தில் 1, மலையாளத்தில் 1, கொங்கணியில் 1, வங்காளத்தில் 3, மராத்தியில் 1, நேபாளியில் 1 ஆக 28 காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் 11 அத்தியாயம் கொண்ட மருத்துவப் பாட நூல் 2-ஆம் பாகம் நூலையும் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அனைத்துக் காணொளிகள் மற்றும் பாடநூலை ஸ்ரீ பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவா்கள் உருவாக்கிக் கொடுத்து கல்லூரிக்கும் பேராசிரியா்களுக்கும் பெருமை சோ்த்துள்ளனா். காணொளிகளை இலவசமாக ’ யூடியூபில்’ பாா்த்து தாய்மொழியில் மருத்துவ அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் பி. சசிகுமாா், கல்வி ஆலோசகா் ஆா். வீரபாகு, துணை முதல்வா் ரேணுகாதேவி, அறிவியல் தமிழ் மன்றத் தலைவா் கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் டி. பிந்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.