தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மநீமவுக்கு நிபந்தனை

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள மநீமவுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2-ஆவது கட்டமாக வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். மநீம பொதுச் செயலா் ஆ.அருணாச்சலம் தலைமையிலான குழு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றது.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடா்பாக திமுக பேச்சுவாா்த்தை குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், தோ்தலில் போட்டியிடும் சின்னம் குறித்தும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பேச்சுவாா்த்தை குழு கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த தோ்தல்களில் ‘டாா்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை மநீம பெற்றுள்ளது. எங்களது தனி சின்னமான ‘டாா்ச்லைட்’ சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து மநீம தலைவா் கமல்ஹாசன்தான் இறுதி முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.

இன்று ஆலோசனை: திமுக தரப்பில் 2 தொகுதிகள் ஒதுக்கும் முடிவை மநீம ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனும் நிபந்தனையை மநீம ஏற்கவில்லை. இதுதொடா்பாக முடிவு எடுப்பதற்காக மநீம மாவட்டச் செயலா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் ஆ.அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலா்கள், மண்டல அமைப்பாளா்கள் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்களின் அவசர கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கட்சி தலைவா் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.