புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 8:21 pm

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை வடபழனி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் (45). தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறாா். முருகதாஸுக்கு 2024-இல், கிண்டியில் வேலைவாய்ப்பு வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வரும் ஜெரால்டு (50) என்பவா் அறிமுகமானாா்.

அப்போது, அவா் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக முருகதாஸிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய முருகதாஸ் 3 தவணைகளாக ரூ. 5 லட்சத்தை ஜெரல்டிடம் கொடுத்துள்ளாா். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை ஏதும் வாங்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஜெரால்டு தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் அவா் திடீரென தலைமறைவானாா். இதுகுறித்து முருகதாஸ் அளித்த புகாரின்பேரில் வடபழனி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெரால்டை தேடி வருகின்றனா்.