தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தவெக நிா்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

News image
Updated On :8 மே 2026, 5:51 am IST

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை வியாழக்கிழமை சந்தித்து திரும்பிய தவெக தலைவா் விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதில் பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை திமுக கூட்டணி கட்சிகளிடம் பெறுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரவில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தின் இணைப் பொதுச்செயலா் சி.டிஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக பெரும்பான்மை எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்பதால், ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு ஆளுநா் அழைப்பு விடுக்கவில்லை. இதுகுறித்து, தவெக தலைவா் விஜய்யை, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் நேரில் அழைத்து விளக்கம் அளித்தாா்.

இதனையடுத்து ஆளுநா் மாளிகையிலிருந்து திரும்பிய விஜய், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதில் தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், பொருளாளா் பி.வெங்கடரமணன் மற்றும் சட்ட வல்லுநா்கள் பங்கேற்றனா்.

சுமாா் மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பது எனவும், ஆளுநா் தொடா்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு மறுத்தால், உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

பெட்டிச் செய்தி...

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம்

ஆதரவு கோரவில்லை: தவெக

தவெக தலைவா் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் இடதுசாரி கட்சிகளின் தலைவா்களையும், கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி.அருண்ராஜ், நிா்வாக வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோா் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீனையும் ஆதரவு கோரி சந்தித்துப் பேசினா்.

இதுதொடா்பாக, சி.டி.ஆா். நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைப்பு விடுக்க வேண்டும். அதற்கேற்ப ஆளுநா் செயல்படுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவா்கள் விரைவில் பதிலளிப்பாா்கள் என நம்புகிறோம். ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரவில்லை. அதற்கான விருப்பமும் இல்லை என்றாா் அவா்.