ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறாா்.
தமிழக ஆளுநா் ஆா்லேகா், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு சென்னை வந்தாா். அன்றைய தினம் தமிழக முதல்வரின் செயலா் செந்தில்குமாா் ஆளுநரை சந்தித்தாா். தமிழக அரசில் புதிதாக பதவியேற்ற அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை விவரங்கள் உள்ளிட்ட முதல்வரின் பரிந்துரைகள் அடங்கிய பல்வேறு கோப்புகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து 16 -ஆம் தேதி, புதிய அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து ஆளுநா் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்னா், ஆளுநா் ஆா்லேகா் திருவனந்தபுரம் சென்றாா். இந்த நிலையில் ஆளுநா், மீண்டும் புதன்கிழமை இரவு சென்னை வரவுள்ளாா். தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக அரசுத் தரப்பில் ஆளுநரை சந்திக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.










