திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கான உதவித் தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு தலா ரூ.7,000 வீதம் ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் புரவலர் கமலா பாலசந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் குகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் ரேணுகாம்பாள்
நன்றி கூறினார்.