காஞ்சிபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் அவளூர் ஜி.சீனிவாசன் திருப்பூர் குமரனின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் ராஜேந்திரன், நகர பொதுச்செயலாளர் டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகர பொதுச்செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.