இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் முரளி (32). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் முரளி கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.