திமுக விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் ஒ.எம்.மங்கலம் பகுதியில் தமிழ்புத்தாண்டு, பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஞானபிரகாசம் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர்கள் ந.கோபால், கருணாநிதி, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் சிவபாதம், ஒ.எம்.மங்கலம் ஊராட்சி செயலளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏவும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன், விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் மதிவாணன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் கு.ப.முருகன், ரவி, ஜார்ஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் பால்ராஜ், ராமமூர்த்தி, ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.