மதுராந்தகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் விவேகானந்தரின் 156-ஆவது ஜயந்தியை முன்னிட்டு, தேரடி வீதியில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் மாவட்டச் செயலாளர் இ.கே.தினகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வீரராகவன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி விஜய்மகராஜ் விவேகானந்தரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், வியாபாரிகள், பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.