மதுராந்தகம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் ஜமீன் எண்டத்தூரில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரிமா சங்கத் தலைவர் இ.கே.தினகரன் தலைமை வகித்தார்.
மண்டலத் தலைவர் வரதராஜன், வட்டாரத் தலைவர் அதியமான்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க மாவட்ட ஆளுநர் அன்பு கலந்து கொண்டு, ஜமீன் எண்டத்தூரில் இயங்கி வரும் அங்கன்வாடி மையக் கட்டடத்தை ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல், அதற்கு தேவையான தளவாடப் பொருள்கள், குழந்தைகளுக்கான எழுது பொருள்கள், தட்டு, டம்ளர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி, சங்க மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், அரிகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கமலநாதன், தாஜுதீன், பதுதர், சம்பந்தமூர்த்தி, தினேஷ், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.