சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பேருந்து மோதியதில் அவர் இறந்தார்.
மதுராந்தகத்தை அடுத்த பசுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். அவரது மனைவி தெய்வானை (70). அவருக்கு காது சரிவரக் கேட்காது.
இந்நிலையில், தெய்வானை கடந்த வெள்ளிக்கிழமை குப்பை கொட்டுவதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது எலப்பாக்கத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தெய்வானை சனிக்கிழமை இறந்தார்.
இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ஜின்னா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.