செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆலவேலி ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவில் வேளாண்மை துறை உதவி இயக்குநர் தாமஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மழைநீர் சேகரிப்பு, நீர்க்சிக்கனம், பாரம்பரிய நீர் நிலைகள் மற்றும் நீராதாரங்களை புதுப்பித்தல், கிணறு, ஏரி, வாய்க்கால் குளங்களை சீரமைத்தல், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், கோடைக் கால உழவு முறை, நெல் சாகுபடிக்கு டெல்டா பகுதிக்கு ஏற்ற குறுகிய கால பயிரான கேழ்வரகு, மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய வகை பயிர்களை பயிரிட்டு பயன்பெறலாம் என்றார் அவர். கருத்தரங்கில் வேளாண்மை துறை அலுவலர்கள் திருமுருகன், சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.